Friday, March 20, 2009

என் அம்மா..

காய்ச்சல் வந்ததோ எனக்கு..
ஆனால் சுடுவதோ உன்
மனதிற்க்கு..
* நான் பள்ளி செல்லும்
போதெல்லாம்...
ஏன் மா அழுகிறாய் என்பாய்.
உன்னை யாரேனும் திருடி விட்டால் என்ற பயத்தில்..தான் அழுவேன்..
பள்ளி சென்று திரும்பும்
போதெல்லாம்...
உன்னை பார்த்து விட்ட சந்தோஷத்தில்... உன்னை கட்டிக் கொண்டு முத்தமிடுவேன்..
*இன்றும் அலுவலகம்
முடிந்து திரும்பும்
போதெல்லாம்...
ஓடி வந்து உனை கட்டிக் கொள்ள ஆசை தான் அம்மா..
*நீ என்னை கவனித்து கொண்டு என்னுடனே இருக்கும்
நிமிடங்களுக்காக..
அடிக்கடி காய்ச்சல் எனக்கு
வரக்கூடாதா என்று ஆசை பட தோன்றுகிறது...அம்மா...

No comments: